இலவச ரேஷன் திட்டத்திற்கு தடா போட்ட மத்திய அரசு… நீட்டித்த மாநில அரசுகள்!

by Lifestyle Editor

இந்தியாவில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் உச்சம் பெற்றது. இதையடுத்து மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் உணவு இல்லாமல் அல்லல்பட்டனர். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவ்வாறு திரும்பியவர்கள் ஊருக்குச் செல்லும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மத்திய அரசு கடும் விமர்சனத்துக்குள்ளானது.

அதற்குப் பின்னர் தான் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின்படி ரேஷன் கடைகள் மூலமாக 80 கோடி பேருக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவு தானிங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மானிய விலை உணவு தானியத்துக்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தத் திட்டத்தை நவம்பர் 30 ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கும் எண்ணம் இல்லை என மத்திய உணவுத் துறை நேற்று அறிவித்தது.

நாடு கொரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சிப் பாதையில் செல்வதால்தான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தது. ஆனால் இதனை மேலும் நீட்டிக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல அடுத்த 6 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் திட்டத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். நாட்டில் பணவீக்கம் உச்சத்தில் இருப்பதாலும், இதனால் ஏழை மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, ஒருவேளை உணவு சாப்பிடுவது கூட பலருக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இதை அறிவித்திருக்கிறார். அதேபோல உபி முதல்வர் யோகி ஹோலிப் பண்டிகை வரை இத்திட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment