கூகுள் எடுத்த அதிரடி நடவடிக்கை! நவம்பர் 9ம் தேதி முதல் இந்த மாற்றம் நடக்கும்!

by Lifestyle Editor

கூகுள் நிறுவனம் தனது பயனாளர்கள் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமுலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது.

அதன்படி இந்த வழிமுறை நவம்பர் 9 ஆம் திகதி அமலுக்கு வருகிறது. இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும்.

இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும். நவம்பர் 9 ஆம் திகதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment