மஷ்ரூம் பிரியாணி…!

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 2 கப்

காளான் – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

தேங்காய் பால் – 1/2 கப்

தயிர் – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 2 ஸ்பூன்

சோம்பு தூள் – 1/2 ஸ்பூன்

பட்டை – 2

ஏலக்காய் – 3

கிராம்பு – 5

பிரியாணி இலை – 1

எண்ணெய் – தேவைக்கேற்ப

நெய் – தேவைக்கேற்ப

புதினா – ஒரு கைப்பிடி

கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி

தண்ணீர் – 3 கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பாசுமதி அரிசியை இரண்டு, மூன்று முறை நன்றாக தண்ணீரில் அலசி கொள்ளுங்கள்.

பிறகு அரிசியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுமார் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்துக்கொள்ளவும்.

பின்னர் காளானை நன்றாக சுத்தம் செய்து அலசி தேவையான அளவிற்கு நறுக்கி தனியே வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ளுங்கள்.

இஞ்சி பூண்டு பச்சை வாசம் போனவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் சோம்பு பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.

மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் அதில் தேங்காய் பால், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிரேவியாக மாறும்வரை சமைக்கவும்.

குறிப்பு : பொதுவாக காளான் வேகும்போது தண்ணீர் விடும் எனவே தற்போது இதில் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

இவை நன்கு வதங்கியவுடன் தற்போது இதில் ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் 3 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 அல்லது 3 விசில் வரும் வரை விடவும்.

குக்கரில் தானாக பிரஷர் அடங்கியவுடன் மூடியை திறந்தால் சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி தயாராக இருக்கும்.

இந்த செட்டிநாடு காளான் பிரியாணியை வெங்காய பச்சடி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment