கொடூரமாக தாக்கப் போகும் வெயில்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்…

by Lifestyle Editor

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, நடப்பாண்டு கோடைக்காலம் தமிழகத்தில் மிக உக்கிரமாகவே இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதலாகவே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தற்போது மூளையையே கரைக்கும் அளவுக்கு வெயில் அடித்து துவைத்து வருகிறது. காலை 9 மணிக்கு கூட வெளியே போக முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. அதிக வெப்பத்தின் காரணமாக பலர் சாலைகளில் மயக்கம் போட்டு விழும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இப்படி கம்பியில் மாட்டிய கிரில் சிக்கனை போல தமிழ்நாட்டு மக்கள் வெயிலில் மாட்டி வதைப்பட்டு வந்த சூழலில்தான், சில்லென கோடை மழை வந்து தமிழ்நாட்டின் சில பகுதிகளை குளிரச் செய்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

ஆனால், இந்த மழை தந்த மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவிப்பதற்குள்ளாக ஷாக் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். அதாவது, இனி தமிழகத்தில் கொடூரமான வெப்ப அலை வீசும் என்ற தகவலை தான் அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டில் மழையை இனி எதிர்பார்க்க வேண்டாம். வரும் வியாழக்கிழமை (ஏப்.18) முதலாக தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக, சென்ையில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகக்கூடும். டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் வெயில் பொறித்து எடுக்கும். சில இடங்களில் 107 டிரிகி பாரன்ஹீட் வரை கூட வெப்பம் பதிவாகும்.

இன்றைய நிலவரப்படி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் மழை பெய்யும். அதே சமயத்தில், மழை பெய்து முடித்த ஈரோடு உள்ளிட்ட இடங்களில் அதிக வெப்பம் இருக்கும். நாமக்கல், சேலம், கரூர் ஆகிய பகுதிகளில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்.

சென்னையில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 95 டிகிரி பாரன்ஹீட் அளவும், உட்புற பகுதிகளில் 96 டிகிரி பானர்ஹீட் அளவும் வெப்பநிலை இருக்கும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் கடுமையான வெப்பம் இருக்கும்” என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment