100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு: மத்திய அரசு அரசாணை வெளியீடு..!

by Lifestyle Editor

கடந்த 2006-ம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.

இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5 கோடியே 97 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் கூறுகின்றன.

இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த தினசரி ஊதியத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரூ.294ஆக இருந்த ஊதியம், ரூ.319ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாநிலங்களுக்கும் மாநில வாரியாக ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment