தொடர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..

by Lifestyle Editor

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ் கிரீம் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழி ஐஸ்கிரீமுக்கும் பொருந்தும். தொடர்ந்து அளவுக்கதிகமாக ஐஸ் கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை இங்கு காண்போம்.

வலிநிவாரணியாக பயன்படும் டை எத்திலீன் கிளைக்கால் என்னும் வேதிப்பொருளை கலந்து ஐஸ் கிரீம்களை செய்கின்றனர். இது உடலுக்கு மிகவும் கேடு தரக்கூடியது. தொடர்ந்து ஐஸ் கிரீமை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் இது அல்சர் என்னும் குடல் புண்களை உருவாக்குகிறது. தொடர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் நமது கல்லீரல் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து அதிகமாக ஐஸ் கிரீம் சாப்பிடுவதால் இதயத்தில் வலி ஏற்படும். நமது சிறுநீரகப்பைகளை பாதிக்கும்.

ஐஸ் கிரீம் சீக்கிரம் உருகாமல் இருக்க, ஷாம்பூ மற்றும் சோப்புகளில் பயன்படுத்தப்படும் பாலிசார்பேட் 80 என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. எனவே ஐஸ் கிரீம் சாப்பிடுவதை தவிர்த்து, எப்போதாவது மட்டும் ஐஸ் கிரீம் சாப்பிடும் பழக்கத்தை அடிக்கடி பின்பற்றுவோம்

Related Posts

Leave a Comment