அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

by Lifestyle Editor

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் கோடை காலம் நெருங்கி வருவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment