சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 5-ஆவது சீசனில் இல்லை..

by Lifestyle Editor

குக்குகளை விட கோமாளிகள் காட்டில் தான் பட வாய்ப்புகள் கொட்டிக்கொண்டிருக்கிறது எனலாம். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இருந்து வருபவர்கள், செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் தான். இவர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்றாப்போல் பேசுவதும், ஜாலியாக கமெண்ட் சொல்லி வருவதால், இவர்களுக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகி விட்டது.

இந்நிலையில், விரைவில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சி துவங்கும் என கூறப்பட்ட நிலையில்… அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், மற்றும் நடுவர்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் வெளியாக தொடங்கியது.

இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக, நடுவர்களின் ஒருவரான வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக ஊடக தளங்களில், குக் வித் கோமாளி சீசன் 5 புதிய சீசன் தொடங்கும் என்றும், இந்த நிகழ்ச்சியில் நான் நடுவராக இருப்பேன் என செய்திகள் பரவி வருகின்றன.

மில்லியன் கணக்கான மக்களை மகிழ்ச்சியடையச் செய்த இந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து நான் ஓய்வு எடுக்க போகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியை உருவாக்கி செயல்படுத்திய எனது இயக்குனர் மற்றும் நிகழ்ச்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் இந்த நிகழ்ச்சி பலரது மன அழுத்தத்தை குறைக்க கூடிய ஒரு நிகழ்ச்சியாக இருந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுவது, ஒரு கடினமான முடிவு தான். நான் அதில் உறுதியாக நிற்கிறேன். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment