திருமந்திரம் – பாடல் 1768: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம்

by Lifestyle Editor

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுளே
சுத்த சிவபதந் தோயாத தூவெளி
யத்தன் திருவடிக் கப்பாலைக் கப்பாலா
மொத்தயு மாமீசன் றானான துண்மையே.

விளக்கம்:

உலகத்தை இயக்கிக் கொண்டு இருக்கின்ற இறை சக்திக்கும் மேலே அண்ட சராசரங்களை இயக்கிக் கொண்டு இருக்கின்ற அசையும் சக்தியாகிய இறைவிக்கு உள்ளே சரிபாதியாக நிற்கின்ற ஒரு குற்றமும் குறையும் இல்லாத தூய்மையான சிவப் பரம்பொருளின் திருவடியானது, எதிலும் குறைவில்லாததும் எதனாலும் பாதிக்கப் படாததுமாகிய தூய்மையான பரவெளியில் வீற்றிருக்கின்றது. அப்படி இருக்கின்ற அனைத்திற்கும் தந்தையாகிய இறைவனின் திரு அடிகளானது அண்ட சராசரங்களையும் தாண்டி பரவெளியையும் தாண்டி இருக்கின்ற எல்லையில்லா இடத்தில் தனித்தும் இருக்கின்றான் எப்பொருளுக்கும் தலைவனாகிய இறைவன். அவன் தானே அனைத்துமாக இருப்பது உண்மையே ஆகும்.

Related Posts

Leave a Comment