வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு புறக்கணிப்பு: எதிர்வரும் 8 ஆம் திகதி தி.மு.க போராட்டம்

by Lifestyle Editor

நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்துக்கு எதிராக தி.மு.க எதிர்வரும் 8 ஆம் திகதி கண்டன போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால், தாக்கல் செய்யப்பட்ட குறித்த வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்” நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுதிட்டத்தில், தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள் ”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் தமது எம்.பி.க்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக தி.மு.க அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment