குஜராத்தை உலுக்கிய படகு விபத்து:18 பேர் மீது வழக்குப்பதிவு

by Lifestyle Editor

குஜராத்தில் அண்மையில் இடம்பெற்ற படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் ஹர்ணி ஏரியில் அண்மையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த சுற்றுலாப் படகொன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த படகு விபத்து தொடர்பாக 18 பேர் மீது குஜராத் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment