பொங்கல் சிறப்பு தொகுப்பு – நாளை முதல் டோக்கன் விநியோகம்

by Lifestyle Editor

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2024ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அத்துடன் பொங்கல் நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்திற்காக நாளை முதல் டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும்; டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment