விஜயகாந்த் கோபத்தின் ரசிகன் நான்- கமல்ஹாசன்

by Lifestyle Editor

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்தின் உடல் தற்போது தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “எந்தளவு பணிவு இருந்ததோ அதே அளவு நியாயமான கோபமும் கொண்டவர் விஜயகாந்த். எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை விஜயகாந்துக்கு மட்டும்தான் சொல்ல முடியும். இப்படிப்பட்ட நேர்மையாளர்களை இழந்திருப்பது என்னைப் போன்றவர்களுக்கு ஒரு தனிமைதான். விஜயகாந்த் கோபத்தின் ரசிகன் நான், அதனால்தான் அவர் அரசியலுக்கே வந்தார். நல்ல நண்பருக்கு நான் விடைகொடுக்கிறேன். விஜயகாந்த் போன்ற ஒரு நல்ல மனிதர் இனியும் இல்லை, அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்” என்றார்.

Related Posts

Leave a Comment