இன்று முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம் ..!

by Lifestyle Editor

தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்கியது.

அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 23ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 6, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7 ,9 , 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது.

அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் பள்ளி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் நாளான இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வுகளுக்கு பின்னர் அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment