அயலான் ரிலீஸுக்கு நீதிமன்றம் தடை..

by Lifestyle Editor

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது. அதற்கு காரணம் பைனான்ஸ் பிரச்சனை என கூறப்பட்டது.

ஷூட்டிங் முடிந்து அனைத்து பணிகளும் முடிவடைந்து இருக்கும் நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு அயலான் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அயலான் படத்தை தயாரித்த 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனத்திடம் வாங்கிய 10 கோடி ருபாய் கடனை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

அதில் 3 கோடியை செலுத்திய நிலையில் மீதம் இருக்கும் தொகையை தரவில்லை என டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
`
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அயலான் படத்தை 4 வாரங்கள் ரிலீஸ் செய்ய தடை விதித்து இருக்கிறது. அதனால் அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறி ஆகி இருக்கிறது.

Related Posts

Leave a Comment