டிசம்பர் 27ம் தேதி விடுமுறை..

by Lifestyle Editor

புகழ்பெற்ற ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 27ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், பெரும்பான்மையாக வசித்து வரும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை டிசம்பா் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 6-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment