வட மாவட்டங்களில் ஓய்ந்தது மழை..

by Lifestyle Editor

சென்னை உள்பட வட மாவட்டங்களில் கன மழை பெய்து ஓய்ந்து உள்ள நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு தென் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபி கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்யும் என்றும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment