செங்கல்பட்டில் நிலநடுக்கம்!

by Lifestyle Editor

செங்கல்பட்டில் இன்று காலை 7.39 மணியளிவில் இலேசான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக புவி அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது 3.2 ரிச்டர் அளவில் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

எனினும் இந்நிலநடுக்கத்தினால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment