நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்..!

by Lifestyle Editor

மிக்ஜம் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

ஆந்திர பகுதிக்குள் மிக்ஜம் புயல் கடந்துள்ள நிலையில் இன்று காலை 9 மணி முதல் சென்னை விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இயல்புநிலை திரும்பாததால் குறைவான அளவிலேயே விமான சேவைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு வரவேண்டிய 88 விமானங்களும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 87 விமானங்களும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment