கோவையில் மாஸ் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

by Lifestyle Editor

கோவை மாவட்டத்தில் புளூ காச்சல் பரவி வருவதை அடுத்து பொதுவெளியில் செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகிய பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இது வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எனவே காய்ச்சல் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் புளூ காச்சல் பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Related Posts

Leave a Comment