கந்தசஷ்டி: சிறப்பு ரயில் இன்று இயக்கம்

by Lifestyle Editor

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர். இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்திய மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து செய்வார்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி கடந்த 13ஆம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. நாளை கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் கந்த சஷ்டி விழாவிற்கு, திருச்செந்தூர் செல்ல ஏதுவாக நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தஞ்சை வழியாக செல்லும் ரயில், எழும்பூரில் இருந்து இன்றிரவு 11.55க்கு புறப்படுகிறது.

Related Posts

Leave a Comment