அதிகாலை எழுவதின் ஆரோக்கிய பலன்கள்

by Lifestyle Editor

இரவு முடிவடையும் அதிகாலை நேரமானது நிசப்தமான சூழல் நிலவும். இயற்கையின் அமைதியான இந்த நேரம் உடலுக்கும், மனதுக்கும் அமைதியை ஏற்படுத்தும் சமயம் ஆகும். வாகன இரைச்சல் இல்லாத அதிகாலை நேர தூயக்காற்றை சுவாசிப்பது நுரையீரலுக்கு நன்மை பயக்கிறது.

அதிகாலை நேரத்தில் எழும்போது அதிக வெயில் அற்ற அந்த சாந்தமான காலநிலை உடலை குளிர்விப்பதுடன், நல்ல உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் ஏதுவான சமயம் ஆகும். இதனால் அந்த நாள் முழுக்க நமது சுறுசுறுப்பு நீடிக்கும். நமது புலன்கள் சுறுசுறுப்பை உணர்ந்து செயல்படும்.

மேலும் அதிகாலை சீக்கிரமே எழுவது அந்த நாளை நீண்ட நாளாக மாற்றும். பல்வேறு செயல்பாடுகளையும் காலையிலேயே எளிதாகவும் செய்து முடிக்க இயலும்.

Related Posts

Leave a Comment