திருப்பதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா ….

by Lifestyle Editor

சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இம்மாதம் 10 ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 22 ,500 என்ற எண்ணிக்கையில் பத்து நாட்களுக்கும் சேர்த்து 2,25,300 ரூபாய் டிக்கெட் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இலவச தரிசனம் மூலம் நாள் ஒன்றுக்கு 42,500 பேர் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களில் 4, 25,000 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம். 10 நாட்களில் 7 லட்சம் முதல் 8 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையான வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய நாள் ஒன்றுக்கு 70,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மேல் அனுமதி அளிக்கப்படும்.

இதற்காக வைகுண்ட வாசல் திறந்திருக்கும் நாட்களில் நாளொன்றுக்கு 22,500 என்ற அடிப்படையில் 300 ரூபாய் கட்டணத்தில் ஆன 2,25,000 டிக்கெட்டுகள் இம்மாதம் 10ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும்.

வைகுண்ட வாசல் பிரவேசம் செய்ய பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் தற்போது செயல்படும் கவுண்டர்களுடன் கூடுதலாக கவுண்டர்கள் அமைக்கப்படும். அவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 42,500 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 4,25,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

இலவச தரிசன டோக்கன்கள் தேவையான பக்தர்கள் கவுண்டர்களுக்கு நேரடியாக வந்து தங்களுடைய ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து அவற்றை பெற்று
கொள்ளலாம்.

டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் திருப்பதி உள்ள கவுண்டர்களில் டோக்கன்களை வாங்கி வரும் பக்தர்களுக்கு மட்டுமே ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment