கர்ப்பமாக இருந்த சீரியல் நடிகை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ..!

by Lifestyle Editor

அதாவது மலையாளத்தில் சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகையும், மருத்துவருமான பிரியா 35 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

நடிகர் கிஷோர் சத்யா தனது சமூக வலைத்தள கணக்குகளில் தனது ரசிகர்களுக்கு நெஞ்சை பதற வைக்கும் செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், ”மலையாளத் தொலைக்காட்சித் துறையில் மேலும் ஒரு எதிர்பாராத மரணம்.

டாக்டர் பிரியா நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். குழந்தை ஐசியூவில் உள்ளது. வேறு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment