ஆந்திர ரயில் விபத்து

by Lifestyle Editor

ஆந்திர ரயில் விபத்தால் இதுவரை 18 ரயில்கள் முழுமையான ரத்து செய்யப்பட்டதாகவும், 22 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ள நிலையில் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் தகவல் தெரிவிக்கும் வகையில், விஜயநகரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 94935 89157 என்ற உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் 89780 80006 என்ற ரயில்வே உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்று மாலைக்குள் இருப்புப்பாதை சீராகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment