பீகாரில் குடிசை பகுதியில் தீ விபத்து – 4 சிறுமிகள் பரிதாபமாக பலி …

by Lifestyle Editor

பீகார் மாநிலத்தில் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்தயாலு ரெயில் நிலையம் அருகே ஏராளமான குடிசை வீடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில், நேற்று இரவு அங்குள்ள வீடு ஒன்றில் எதிர்பாராதவிதமாக நள்ளிரவு 12 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ உடனடியாக அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவிய நிலையில், வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் பதறி அடித்துக்கொண்டு உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Related Posts

Leave a Comment