சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14 ஆம் தேதி நடை திறப்பு ..

by Lifestyle Editor

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வைகாசி மாதம் பூஜை நடக்கவுள்ளது.

இதையொட்டி, வரும் மே 14 ஆம் தேதி மாலை மணிக்கு கோவில் நடை திறக்கப்படவுள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

வரும் மே 15 ஆம் தேதி நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்படவுள்ளது.

சபரிமலை கோவில் நடைதிறப்பையொட்டி, கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயங்கி வருகிறது.

வைகாசி மாத பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது.

Related Posts

Leave a Comment