கோடை விடுமுறை : வண்டலூர் உயிரியல் பூங்கா அனைத்து நாட்களும் செயல்படும் என அறிவிப்பு ..

by Lifestyle Editor

கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் முழுவதும் அனைத்து நாட்களிலும், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்காவாகவும், இந்தியாவின் பழைமையான பூங்காவாகவும் இருந்து வருவது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தான். இந்த பூங்காவிற்கு ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ. 90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ. 50 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வழக்கமாக வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்க் கிழமைகளில் விடுமுறை விடப்படும். கோடை விடுமுறையை ஒட்டி மே மாதம் முழுவதும் அனைத்து நாட்களுமே வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுவாகவே வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வர். கோடை விடுமுறை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த ஞாயிறு அன்று ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வண்டலூருக்கு வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Related Posts

Leave a Comment