அரசு ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை – தமிழ்நாடு அரசு அரசாணை

by Lifestyle Editor

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை நடத்துவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கண், காது உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையும் பரிசோதனை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Posts

Leave a Comment