சென்னையில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம் ..

by Lifestyle Editor

தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி( வெள்ளிக்கிழமை) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அத்துடன் ஏப்ரல் 22ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பள்ளி மாணவர்களிக்கு கோடை விடுமுறையும் விடப்படுவதாலும், தொடர் விடுமுறை காரணமாகவும், பண்டிகையை ஒட்டியும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அதிக ஆர்வம் காட்டுவர். அவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment