சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி ..

by Lifestyle Editor

சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு படைக்கப்படும் காய், கனி வகைகளை பார்த்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு இனிமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்காக சித்திரை விஷூ நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நாளை நடக்கும் நிலையில், காலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் சித்திரை மாதப்பிறப்பையொட்டி நேற்று முன்தினம் கோயில் திறக்கப்பட்டது. சபரிமலையில் நடைபெறும் முக்கிய விழாவான சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

சித்திரை முதல்தினத்தில், சாமி முன்பு காய், கனி வகைகளைப் பார்த்து தரிசனம் செய்தால், இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாகவும் வளமாகவும், அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

எனவே நாளை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதன் பிறகு காய், கனிகள் அடுக்கி பூஜை செய்யப்படும் என்றும் சாமிக்கு படைக்கப்பட்ட காய், கனிகள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக திறக்கப்படும் கோவில் நடை வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment