அம்பேத்கர் 133வது பிறந்தநாள் : முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

by Lifestyle Editor

அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ் அணியினர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலயணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் சென்னை MRC நகரில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் நேரு சேகர்பாபு, சுப்ரமணியன் சாமிநாதன், கணேசன், செஞ்சி மஸ்தான், மேயர் பிரியா ஆகியோரும் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

அதேபோல் அண்ணல் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் உள்ள அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சேலத்தில் மாநகரட்சி தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் மாலை அணிவித்தும், மலர்த்தூவியும் மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Related Posts

Leave a Comment