சென்னை உள்பட 16 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் …

by Lifestyle Editor

இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கோயம்புத்தூர், ஆகிய பகுதிகளில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர் மயிலாடுதுறை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை வரையும் என்றும் இடி மின்னலுடன் சில இடங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

Related Posts

Leave a Comment