தினம் ஒரு திருமந்திரம் – திருமந்திரம் – பாடல்1679: ஆறாம் தந்திரம் – 12.

by Lifestyle Editor

சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமி னந்தியை நம்பெருமான் றன்னைத்
தேடுமி னின்பபொருள் சென்றெய்த லாமே.

விளக்கம்:

கடிவாளம் கட்டாமல் அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற குதிரையைப் போல அலைகின்ற மனதை கடிவாளத்தை கட்டி குதிரையை அடக்குவது போல மனதை தியானத்தின் மூலம் உறுதியாக பற்றிக் கொண்டு மனதை அடக்குங்கள். ஞானியைப் போல வெறும் வேடம் மட்டும் போட்டுக் கொண்டு என்ன செய்வீர்கள்? இந்த வீணான வேலை வேண்டாம் மனிதர்களே. உங்களுக்குள் வீற்றிருக்கும் குருநாதனாகிய இறைவன் நமக்கெல்லாம் தலைவனாக இருக்கின்ற அவனை தேடி அடைந்தால் பேரின்ப பொருளாகிய இறைவனை சென்று பேரின்பத்தை அடைய முடியும்.

Related Posts

Leave a Comment