மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31ம் தேதி வரை அவகாசம் – அமைச்சர் அறிவிப்பு !

by Lifestyle Editor

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் வலியுறுத்தி இருந்தது. மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த மாதம் 28ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் இதில் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பண்டிகை நாட்கள் தவிர ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பலரும் இன்னும் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். இதனால் அவர்கள் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இன்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஜனவரி 31ம் தேதிக்கு பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment