எம்.ஜி.ஆர். தான் என்னை வாழ வைத்த தெய்வம் – அமைச்சர் துரைமுருகன் உருக்கம்…

by Lifestyle Editor

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான் என்னை வாழ வைத்த தெய்வம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதேபோல் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ரினார்.

கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: நன்றி என்று பார்த்தால் என் முதல் நன்றி எம்.ஜி.ஆருக்கு தான். ஆனால் கட்சி என்று பார்த்தால் தி.மு.க. தான் என்னுடைய கட்சி. எம்.ஜி.ஆர். தான் என்னை வாழ வைத்த தெய்வம். வணக்கத்திற்கு உரியவர். என்றும் வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளுக்கு எல்லாம் ஓடுகிறவன்.

Related Posts

Leave a Comment