சபரிமலையில் 18ம் படி வழியாக நிமிடத்திற்கு 80 பக்தர்கள் அனுமதி ..

by Lifestyle Editor

சபரிமலையில் நிமிடத்தில் 80 பேர் 18 படியேறி தலா 3 வினாடி தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் கார்த்திகை மாதத்தையொட்டி நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. தற்போது மார்கழி மாதம் தொடங்கியிருக்கும் நிலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடக்காமல் உள்ளது. இணையதளத்தில் 21 லட்சத்து 71 ஆயிரத்து 452 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் இதுவரை 19 லட்சத்து 38,452 பேர் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். அத்துடன் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் பகல் ஒரு மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக ஒன்று 11.30 மணிக்கும் நடை சாத்தப்படுகிறது. கடந்த 30 நாட்களில் மட்டும் 19 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துள்ளனர்.

இந்நிலையில் சபரிமலையில் 18ம் படி வழியாக ஒரு நிமிடத்துக்கு 80 பக்தர்கள் வீதம், ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை மேலே சென்று சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் சபரிமலையில் நிமிடத்தில் 80 பேர் 18 படியேறி தலா 3 வினாடி தரிசனம் மேற்கொள்வார்கள். நாள்தோறும் சபரிமலைக்கு 90,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வருவதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment