அடுத்த 3 மணிநேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

by Lifestyle Editor

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, தருமபுரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தமிழகத்தை தாக்கிய மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. பின்னர் பிற்பகலில் காற்றழ்த்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணிநேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment