டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி ..

by Lifestyle Editor

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவயான 126 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த நான்காம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 50 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையும் அறிவித்து இருந்தது. இதேபோல் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது போல இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவயான 126 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. இதன் காரணமாக ஆம் ஆத்மி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது 125 வார்டுஅளுகு மேல் முன்னிலையில் இருந்த பாஜக அடுத்தடுத்த சுற்றிகளில் பின் தங்கி தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த முறை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜகவிற்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாஜக 97 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் காங்கிரஸ் 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதோடு, 5 வார்டுகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

Related Posts

Leave a Comment