தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில் ..

by Lifestyle Editor

தீபத் திருவிழாவினை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னை கடற்கரை -வேலூர் இடையே இயக்கப்பட்ட ரயில் இனி திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை இடையேயான சிறப்பு ரயில் டிசம்பர் 5ஆம் தேதி இன்று முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு மார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில் டிசம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் எட்டாம் தேதி வரை இயக்கப்படும் என்றும் இந்த சிறப்பு ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை ஆறு மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும் என்றும், மறு மார்க்கத்தில் காலை 9 மணிக்கு புறப்பட்டு மாலை 3:45 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், இந்த சிறப்பு ரயில் டிசம்பர் 6ஆம் தேதி மற்றும் டிசம்பர் 7ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment