கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கியது ..

by Lifestyle Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இன்று தொடங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் மாணவியின் மரணத்தால் நடந்த வன்முறையில் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்தன.

சீரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து இருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுரைப்படி இன்று முதல் பள்ளி திறக்கப்பட்டுள்ளது . ஒன்பதாம் வகுப்பு முதல் +2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதை முன்னிட்டு பள்ளியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஷ்ரவணகுமார் நேற்று ஆய்வு செய்திருக்கிறார். பள்ளியின் மூன்றாம் தளத்தை மட்டும் பூட்டி வைத்து சீல் வைக்க உத்தரவிட்டு உள்ளார்.

Related Posts

Leave a Comment