தமிழகத்தில் இன்று முதல் வருகிற 31ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு …

by Lifestyle Editor

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மன்னார்குடி (திருவாரூர்) 8 செ.மீ., அழகரை எஸ்டேட் (நீலகிரி) 7செ.மீ., கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி), குன்னூர் PTO (நீலகிரி) தலா 5 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

Related Posts

Leave a Comment