திருமந்திரம் – பாடல் 1588 : ஆறாம் தந்திரம் – 1.

by Lifestyle Editor

சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மானிடர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே.

விளக்கம்:

இந்த பரந்து விரிந்து இருக்கின்ற உலகம் முழுவதும் உள்ள பொருள்களை முழுமையாக அறிந்து உணர்ந்து கொண்டேன். அந்த அனைத்து பொருளுக்குள்ளும் சிறப்பாக விளங்குகின்ற உண்மை பொருளான இறைவனை உணர்ந்து கொண்டு அந்த இறைவனை ஓதி திரு அருளையும் பெற்றுக் கொண்டேன். பிற மனிதர்களின் வாழ்க்கையை தன்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து நடக்கின்ற தன்மையை மறந்து ஒழித்து விட்டேன். அவர்களை விட்டு பிரிந்து உலகப் பற்றுக்களை எல்லாம் ஒழித்து விட்டு இந்த பிறவியையும் நீங்கி விட்டேன்.

Related Posts

Leave a Comment