அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

by Lifestyle Editor

தமிழகத்தில் அடுத்த மூணு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ,பெரம்பலூர், திருச்சி, அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மதியத்தில் இருந்து இரவு வரை உள் மாவட்டங்களிலும், இரவு நேரம் தொடங்கி அதிகாலை வரை கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும், மேற்கு மாவட்டங்களான திருப்பூர் ,ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறது.

இன்று மற்றும் நாளை டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறது.

அந்தமான் கடல் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் மாநில சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

Related Posts

Leave a Comment