சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு கேரள அரசின் முக்கிய அறிவிப்பு ..

by Lifestyle Editor

மண்டல பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தினமும் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இவர்களில் தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களே அதிகம். இந்தநிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பக்தர்களின் வருகை மிக குறைவாக இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளதால் இந்தாண்டு பக்தர்களின் எண்ணிகை அதிகமாகவே இருந்து வருகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரியில் இருந்து நீண்ட தூர பயணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அப்படி வரும் பக்தர்களுக்கு ஓய்வு கிடைப்பது இல்லை. இதனால் அப்படிப்பட்ட தொலைத்தூர பக்தர்களுக்கு மலை ஏற்றம் சிரமமாக இருக்கும்.

இதனை கருத்தில் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வரும் பக்தர்கள் நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்தி விட்டு 2 அல்லது 3 மணி நேரம் இளைப்பாறிய பிறகு மலை ஏற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை நேரத்தில் 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் தொலைத்தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் அனைவரும் நன்கு ஓய்வு எடுத்த பின்னரே மலை ஏற வேண்டும் என்று கேர அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts

Leave a Comment