18 வயதுக்குட்பட்டவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை ..

by Lifestyle Editor

மகாராஷ்டிராவின் மேற்கு விதர்பா பகுதியில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் உள்ள பன்சி என்ற கிராமத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொபைல் போன்களுக்கு அடிமையாகி வருவதைக் கண்டறிந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.

புசாத் தாலுகாவின் கீழ் உள்ள பன்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தைகள் விளையாட்டைப் பார்ப்பதற்கும், பார்க்கத் தகுதியற்ற இணையதளங்களில் உலாவுவதற்கும் அடிமையாகிவிட்டதாகக் கவலை தெரிவித்துள்ளனர். பன்சி கிராம பஞ்சாயத்தின் சர்பஞ்ச் கஜனன் டேலே கூறுகையில், அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை தடையை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கிராமப் பள்ளிக் குழந்தைகள் மொபைல் போன்களுக்கு அடிமையாகி விட்டதாகவும், அதன் எதிரொலியாக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கும் முறையான தீர்மானம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக, சர்பஞ்ச் டேல் தெரிவித்தார்.

செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இந்த பிரச்சனைகளை கவுன்சிலிங் மூலம் அகற்றுவோம். தீர்மானத்தை மீறியதற்காக அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். ஆனால் கிராம மக்கள் இந்த முடிவை ஒருமனதாக ஆதரித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

ஆரம்பத்தில், நாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவோம், எங்கள் இலக்கை அடையத் தவறினால், நாங்கள் அபராதம் விதிப்போம், என்று டேல் கூறினார், மேலும் அபராதத்தின் சரியான அளவு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறினார்.

Related Posts

Leave a Comment