திருமந்திரம் – பாடல் 1578 : ஆறாம் தந்திரம் – 1.

by Lifestyle Editor

சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

சுத்த சிவன்குரு வாய்வந்த துய்மைசெய்
தத்தனை நல்லருள் காணா வதிமூடர்
பொய்யத்தகு கண்ணா னமரென்பர் புண்ணி
யரத்த னிவனென் றடிபணி வாரே.

விளக்கம்:

பரிசுத்தமான சிவப் பரம்பொருளே குருவாக வந்தது அனைத்து உயிர்களும் மேல் நிலைக்கு செல்ல வேண்டும் என்கின்ற மாபெரும் கருணை செய்து அனைவருக்கும் தந்தையாக இருந்து நன்மையான அருளை வழங்குதற்காகவே ஆகும். இதை கண்டு உணராத மிகவும் குருடர்களான மூடர்களே தங்களின் பொய்யான எண்ணங்களுக்கு தகுந்தது போல மூன்றாவது கண்ணைக் கொண்டு எரித்து அழிக்கும் இவன் எமனே என்று அறிவின்மையால் கூறுவார்கள். ஆனால் இதை கண்டு உணர்ந்த புண்ணியர்களாகிய அடியவர்களோ அனைவருக்கும் தந்தையாக இருப்பவன் இவனே என்று குருவாக வந்த இறைவனின் திருவடிகளை தொழுது வணங்குவார்கள்.

Related Posts

Leave a Comment