வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்!

by Lifestyle Editor

வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் காமாட்சி விளக்கு ஏற்றினால் மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு.

மங்கலப் பொருள்களில் ஒன்று காமாட்சி விளக்கு என்றும் இதனை ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள் புனிதமாகக் கருதுவார்கள் என்பதும் குறிப்பிடதக்கது

காமாட்சி விளக்கிற்கு தினமும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும் வறுமை எட்டிப்பார்க்காது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

ஒரு காமாட்சி விளக்கை ஏற்றி வழிபடுவது காமாட்சி அம்மனை வழிபடுவதற்கு சமம் என்றும் குலதெய்வமாக இருந்து காப்பாற்றும் காமாட்சி அம்மனை காமாட்சி விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்றும் ஆன்மிகவாதிகள் தெரிவித்து வருகின்றனர்.

காமாட்சி விளக்கு ஏற்றுவதால் பல நன்மைகள் உள்ளது என்றும் அப்படி ஏற்றப்படும் காமாட்சி தெய்வத்தை ஒவ்வொருவரும் தினமும் தங்களது வீட்டில் ஏற்றி நன்மை பயக்கும் வேண்டுமென்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment