அடேங்கப்பா… உறையவைக்கும் குளிரிலும் உற்சாகமாக கபாடி.. இந்தோ-திபெத்திய படைவீரர்கள் மகிழ்ச்சி.!

by Lifestyle Editor

இந்திய இராணுவம் தனது எல்லைகளை பாதுகாக்கும் விஷயங்களில், தனது இறையாண்மையுடன் திறம்பட செயல்பட்டு வருகிறது. ஒருபுறம் பாகிஸ்தான் எல்லை மற்றொருபுறம் திபெத்திய எல்லை என அண்டை நாட்டுடன் சவால் வரும் இடங்களில் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறது.

இதில், இந்தோ – திபெத்திய எல்லை பகுதிகளில் பணியாற்றி வரும் அதிகாரிகள், உறைபணியில் தங்களின் இன்னுயிரை துச்சமென மதித்து இந்திய திருநாட்டிற்காக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது தங்களின் உள்ளதை மகிழ்ச்சியாக வைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், இந்தோ – திபெத்திய பாதுகாப்பு படையில் உள்ள ஹம்வீர்ஸ் என்று அழைக்கப்படும் காவற்படை பிரிவினர், உறைபனியிலும் கபாடி விளையாடுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment