அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் பெண் மரணம்

by Lifestyle Editor

அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் திடீரென்று பெண் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்று அதில் கிடைக்கும் வருமானம் மூலம் வாழ்ந்து வந்தவர் சாந்தி.

55 வயதான சாந்தியின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்த சாந்திக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகவே மது குடித்து வந்திருக்கிறார்.

சம்பவத்தன்றும் அப்படித்தான் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு பாயின் கேர் வீதியில் இருக்கும் மீன் மார்க்கெட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார் . அப்போது தூக்கத்திலேயே அவர் உயிர் இழந்திருக்கிறார்.

இது குறித்து அறிந்த அப்பகுதியினர், உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் சொல்ல, உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment